அகத்தியர் குழம்பு தொகுப்பு – 5
அகத்தியர் குழம்பு –
இலங்கை
யாழ் பாணத்திலிருந்து வெளிவரும் வைத்தியன் மாத
இதழில் மலர் – 4, இதழ், 8 ல் சித்த ஆயுள் வேத டாக்டர் கே. கந்தையா DA.M,F.I.A.P, அவர்கள் எழுதிய அகத்தியர் குழம்பு அமுத
கலைக்கியானம் ஆயிரத்திருநூறும் என்ற கட்டுரைத் திரட்டு இதுவாகும். அமுது நேயர்கள்
பயன் அடையும் வண்ணம் தந்துள்ளோம்.—உதவி ஆசிரியர் – அமுது.
அகத்தியர் குழம்பில் அகத்தியர் பெருங்குழம்பு என்று ஒன்றும் அகத்தியர் மகா
குழம்பு என்று மற்றொன்றுமாக பாடப் பெற்றிருக்கின்றன. அகத்தியர் மகா
குழம்பிப் பற்றியே வைத்தியன் மலர் – 4 இதழ் -5 ஆசிரியர் விளக்கம் எழுதியது போலும் அகத்தியர்
அமுத கலைக்கியானம் த்தில் பாடப் பெற்ற அகத்தியர் குழம்பில் சேரும் சரக்குகளில்
வேறு பாடுகள் காணப்படுகின்றன. அமுது கலக்கியானத்தில் காணப்படும் பாடல் வருமாறு –
உண்மையாய் நம்முடைய குழம்பைக்கேளு
உறுதியுள்ள பெருங்காயம்
மிந்துப்போடு
தன்மையுள்ள கடுகு ரோகிநியுங்
கூட்டித்
தயவான ரசமுடனே காரங் கூட்டித்
நன்மையுள்ள நிருவிடமும் சிலையும்
தாரம்
நல்ல கருஞ்சீரகந்
திப்பிலியுஞ்சேர்த்து
வன்மையுடன் தொகை பார்க்கப்
பத்துமாச்சு
வரிசையுடன் சரியிடையாய் வாங்கிக்
கொள்ளே
************
வாங்கியதோர் மருந்துக்கு எடை
வாளம்
வளமாக அதுக்கரைதான் பச்சை
சேர்த்துப்
பாங்குடனே கல்வத்திலிட்டுக்
கொண்டு
பக்குவமா யீராறு சாமமாட்டித்
தீங்கில்லா முப்பூவும்
பத்துக்கொன்று
சேர்த்து நீதிரமாகச் சாமாமட்டிச்
சாங்கமாய் மருந்தரைக்கும் போதில்
மைந்தா
தயிருடனே சோறுண்டு தயவாயாட்டே
மூன்றாம்
செய்யுளில் எல்லா நோய்க்கும் அனுப்பானம் அறிந்து செய்ய விலகுமெனவும், நான்காம்
செய்யுளில் சித்தர்கள் மகாசபை கூடி இம் மருந்தின் மகத்தான குணத்தை அறிந்து
அம்மருந்தை அருளிசெய்த அகஸ்திய மகா முனிவருடைய பெயரையே இக் குழம்புக்கு
வைத்தார்கள் என்பதுவும். ஐந்தாம் செய்யுளில் “ உயிரான பச்சை தனையறிந்து நம்முடைய
குழம்பைப் பண்ணி பரிவான மாநிடர்க்குச் சொல்லியும்” மற்ற செய்யுள்களில் நோய் நிவாரண
அனுப்பானங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அகத்தியர்
குழம்பை ஒரு பேதி மருந்தாகவும் மூர்ச்சை சன்னி, விஷம், ஆகியவற்றால் கண்ணில்
தீட்டுவதற்கு கழிக்க மாகவும் இன்னும் மற்ற ரோகங்களிலும் சிறு சாந்தி ஏற்படுவதை மாத்திரந்தானே
கண்டோம் கடும் பேதி மருந்தாகையால் இம் மருந்தை எல்லா ரோகங்களிலும் எந்த
நேரத்திலும் கொடுக்க முடியாமல் திண்டாடுவதையுங் கண்டோம். இதில் கண்டறியாத மர்மம்
இருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகிறது இதில் பச்சை என்று சொல்லப்படும் இடம்
கவனிக்கத்தக்கது.
ஒரு
செய்யுளில் வாங்கிய கழஞ்சுக்கு கொப்ப வாளமும் வறுத்துபாதி தாங்கிய பச்சை பாதி என்றும் அமுத
கலக்கியானம் செய்யுளில் வாங்கியதோர் மருந்துக்கு இடைதான் வாளமும் வளமாக அதுக் கரைதான் பச்சை சேர்த்து என்றும் தீங்கில்லா முப்புவும் பத்துக் கொன்று என்றும்
விசேஷமாக காணப்படுகிறது.முன் சொல்லிய பச்சை என்னும்
பதத்திற்கு பின் செய்யுளில் காணும் பச்சை என்னும்
பதத்திற்கும் பச்சைக்கும் சிவப்புக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ குருவுக்கும்
கருவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ அவ்வளவு வித்தியாசம் புலனாகிறது. வாளமும்
வருத்துப்பாதி தாங்கிய பச்சைபாதி என்னும்
தொடருக்கு விளக்கம் கூறுவோரில் சிலர் வாளம் பத்து கழஞ்சாயின் அதில் பாதியை
நெய்யில் வருத்தும் மற்ற பாதியை வருக்காமலே பச்சையாகவும் சேர்க்கவும்
கூறுகின்றனர். ஒரு சாரார் இம் மருந்தில் சேரும் பத்துச் சரக்குகளில் ஒரு பகுதியை
வருத்தும் மறு பகுதியை பச்சையாகவும் சேர்க்கவும் எனக் கொள்கிறார்கள். இதை எவ்விதம்
செய்யினும் இம் மருந்தை இருவிதமாயும் செய்து அனுபவத்தில் கண்ட குண வேறு பாடுகளை
வெளிப்படுத்தினால் எது நல்ல முறை என்று தீர்மானிக்கலாம். அமுத கலைக்கியானம்
இரண்டாம் செய்யுளில் காணும் பச்சை என்பது வேறொரு பொருளைக் குறிக்கின்றது என்பது
தெளிவாகிறது.
இந்த மருந்தை
தந்தருளிய அகத்திய முனியும் உயிரான பச்சைதனையறிந்து நம்முடைய குழம்பை பண்ணு என்றும் சொல்லிவிட்டார். ஆகவே இங்கு பச்சை
என்பது பிறிதொரு பொருளைக் குறிக்கின்றது. அதனைப் பூரணமாக அறிந்து செய்தால் ஏன்
எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தால் மாற்ற முடியாது என்று ஒரு அனுபவ சாலியும்
கேட்கின்றார். இவ்வனுபவத்தால் தனி அனுபானத்தில் பச்சை, முப்பு நீங்கலாக வாளம்
உள்பட்ட பத்தி னொரு சரக்குகளையும் சுத்தி செய்தும் பின் காரசாரத்தில் சுருக்கு
கொடுத்தும் காரமேற்றாத தச தீட்சை செய்த பூநீறு,அன்டக்கல் சுண்ணம் (பச்சை) பாதி
சேர்த்தும் காரமேற்றிய முப்பு பத்துக்கொன்று சேர்த்தும் மருந்தை பாகம் பண்ணிக்
கொடுத்துப் பார்த்ததில் இதற்கு விசேஷ சக்தி உண்டென்பதையும் எல்லா நோய்களுக்கும்
நல்ல மருந்தாகா பாவிக்கலாம் எனவும் நம்புகிறோம்.
அகத்தியர்
குழம்பு வேறு – கவிராஜ் M.K . வீரராகவன்
கருத்து – அமுது வாசகர்களாகிய அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மையத்தில்
பழமையானதும் பலரின் தர்க்கத்திற்கு இடம் தருவதுமான அம அகத்தியர் குழம்பை பற்றி
அறியாதார் யாருமில்லை. இன்று வரையில் முடிபு ஏற்ப்படாததால் என் அணிபவத்தை சிறிது
வெளியிடுகிறேன். அன்பர்கள் அனுபவித்துப் பின் அவரவர் அபிப்பிராயம் தெரிவிக்கக்
கேட்டுக் கொள்கிறேன். முதலாவது இவ் அகத்தியரால் செய்யப்பட்டதல்ல ( அமுதகலைகியானம் 1200 ) மாசில்லா மருந்து பத்தும்
குற்றம் நீக்கப் பட்ட மருந்துகள் பத்திலும் ஒரு கழஞ்சு வாங்கிய கழஞ்சுக்கு ஒரு
வாளமும் மேற்கூறிய பத்துக்கு சமன் வாளம் சேர்க்காமல் முன் எடுக்கப் பட்டபடி
வாளமும் கழஞ்சு ஒன்று (சுத்திசெய்து சேர்க்கவும்) தீங்கில்ல மருந்து பத்தும்
சேர்த்து அரைக்கக் காந்தும் சரக்குகளை நன்றாகச் தூள் செய்து கொண்டு மோரும் சோறும்
உண்டு பின் வாலத்தைத் தனியே அரைத்துச் சேர்க்கவும்
இத்துடன்
தாங்கிய பச்சைபாதி
காரான
வீரமென்னும் பச்சைஎன்னும்
கதிரென்றும்
கன்னியுட நாதமென்னும்
பூநீருக்கு
பச்சை என்று பெயர்
வள்ளுவர் - 16
ஆகவே தசதீச்சை
செய்த பூநீரும் மேற்ப்படி எடைகளில் அதாவது கழஞ்சு அரை –
சரக்க்குகள் –
பெருங்காயம், கடுகு, இந்துப்பு, ரசம், பொறித்த வெங்காரம், நாபி, மனோசிலை, ஓமம்,
தாளகம், கருஞ்சீரகம், வாளம், தசாதீட்ச்சை பூநீருக்கு கழஞ்சு அரை (யாவும் முறைப்படி
சுத்தி செய்து கொள்ளவும்.) இவ்விதமாக கூட்டி செய்யப்பட மருந்து சொல்லி வரும்
நோய்களைக் கூடியவரையில் கண்டிக்கிறது.
இப்படிக்கு – கவிராஜ் –
எம்.கே. வீரராகவன்